Pages

Tuesday, July 5, 2016

வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி

04.07.2016
ஆம்பூர்,

வேலூர் மாவட்ட காது கேளாதோர் சங்கம் சார்பில் மாநில அளவிலான செஸ் போட்டி ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் நடந்தது. மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் ஜோசப் டி.ரவி, பொதுச்செயலாளர் சுதர்சன்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைவர் டில்லி வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் ஆதில்அஹமத் கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்து பேசினார். விழாவில் சுப்பிரமணி, வினோத்சாமுவேல், தினேஷ், ஜெயல் மற்றும் 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ராஜன்பாபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment