Pages

Friday, September 16, 2016

DEAF மாற்றுத்திறனாளி மனைவியை அரிவாள் மனையால் வெட்டிய கணவர் கைது



15.09.2016, வாழப்பாடி: வாழப்பாடி அருகே, சாப்பாடு போடாததால், மாற்றுத்திறனாளி மனைவியை, அரிவாள்மனையால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
வாழப்பாடி, காளியம்மன் நகர் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ஆறுமுகம், 43. இவரது மனைவி தேவி, 35; வாய் பேச முடியாதவர்.நேற்று முன்தினம், வீட்டிற்கு வந்த ஆறுமுகம், மனைவியிடம் சாப்பாடு போடும்படி கூறியுள்ளார். கணவர் கூப்பிட்டது தெரியாமல், பாக்கு வெட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். ஆத்திரமடைந்த ஆறுமுகம், அருகில் இருந்த அரிவாள்மனையை எடுத்து, தேவியை வெட்டினார். கழுத்து, தோள்பட்டை பகுதியில் பலத்த காயமடைந்த தேவியை, அருகில் இருந்தவர்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வாழப்பாடி போலீசார், வழக்கு பதிவு செய்து, ஆறுமுகத்தை கைது செய்தனர்.

No comments:

Post a Comment