Pages

Tuesday, October 11, 2016

மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை

03.10.2016, கோவை : மாற்றுத்திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில் பயணச்சீட்டுகள் பெறுவதை எளிதாக்கவும், சலுகைக்கட்டணம் பெறுவதில் முறைகேடுகள் நடக்காமல் தவிர்க்கவும், இந்திய ரயில்வேயில் புகைப்படம் ஒட்டிய அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. கோவையில் மட்டும் ஏழு பேர், திருப்பூரில், 53 உட்பட சேலம் கோட்டத்தில், 189 பேர் தங்களது அடையாள அட்டைகளை இதுவரை பெற்றுக் கொள்ளவில்லை. அடையாள அட்டைகள் பெறும் பயனாளிகள் உரிய மருத்துவச் சான்றிதழ்களை நேரில் காண்பித்தவுடன் பரிசீலனை செய்ய வேண்டியுள்ளது. எனவே, அடையாள அட்டை பெறாதவர்கள் உரிய ரயில்வே ஸ்டேஷன்களில் வரும், 5ம் தேதிக்குள் அதிகாரிகளை அணுகி அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.விபரங்களுக்கு, 9840916964 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment