Pages

Friday, November 18, 2016

மாற்றுத்திறனாளிகள் கவனத்துக்கு...

18.11.2016, திருப்பூர் : இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.திருப்பூர் மாவட்டத்தில், சுயதொழில் புரிய ஏதுவாக, இலவச மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இரு கைகள் நல்ல நிலையில் உள்ள, கால்கள் பாதிக்கப்பட்ட, செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.விண்ணப்பிக்கும் நபர்களிடம், தையல் பயிற்சி பெற்ற சான்றிதழ் இருத்தல் வேண்டும். வயது வரம்பு, 18க்கு மேல், 45க்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் நல அட்டை பெற்றிருக்க வேண்டும்; வருமான வரம்பு ஏதுமில்லை. மாற்றுத்திறனாளிகள் உரிய விண்ணப்பத்தை, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment