Pages

Monday, November 28, 2016

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்

26.11.2016
ஈரோடு: ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், கை, கால் பாதிக்கப்பட்ட மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு, இலவச மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு வரும், டிச., 2ல் நடக்க உள்ளது. வயது, 18 முதல், 45 வரை உள்ள, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். தகுதி உடைய மாற்றுத்திறனாளிகள், தேசிய அடையாள அட்டை, கல்விச் சான்றிதழ், பதிவு பெற்ற நிறுவனத்திடம் இருந்து, குறைந்தது ஆறு மாத காலம் வரை தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றுடன், டிச., 2, காலை, 9:00 மணிக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நடக்கும் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment