Pages

Wednesday, February 22, 2017

புலிவலத்தில் 25ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்களுக்கு அழைப்பு


21.02.2017 திருச்சி : துறையூர், மண்ணச்சநல்லூர் ஒன்றிய இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம் புலிவலத்தில் 25ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து திருச்சி கலெக்டர் பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் துறையூர் மெயின்ரோடு புலிவலத்தில் வரும் 25ம் தேதி நடக்கிறது. 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி 10, 12ம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ பட்டப்படிப்பு பெற்ற இளைஞர்களுக்கு தகுதிக்கேற்ப, தனியார் துறையில் வேலைவாய்ப்பு அளித்திட இம்முகாம் நடக்கிறது. காலை 9 மணிக்கு முகாம் துவங்குகிறது.

பல்வேறு தொழில் நிறுவனங்கள் இதில் பங்கேற்கின்றன.

மண்ணச்சநல்லூர், துறையூர் ஒன்றியங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம். மேலும் விவரங்களுக்கு இணை இயக்குனர் அல்லது திட்ட இயக்குனர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருச்சி-1 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment