Pages

Tuesday, April 11, 2017

வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது

03.04.2017, கண்ணமங்கலம்: 
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கல்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் யோகேஸ்வரி, 22, வாய் பேச முடியாதவர். கடந்த, 2012 டிச., 23ல், வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த கோபால், 35, என்பவர், வீட்டுக்குள் புகுந்து அவரை பலாத்காரம் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து, கண்ணமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான கோபாலை தேடி வந்தனர். இந்நிலையில், கண்ணமங்கலம் போலீசார், நேற்று கொளத்தூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், மாற்றுத்திறனாளி யோகேஸ்வரியை பலாத்காரம் செய்த கோபால் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோபாலை போலீசார் கைது செய்தனர்

No comments:

Post a Comment