Pages

Monday, July 10, 2017

காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டி: 11 மாவட்ட மாணவர்கள் பங்கேற்பு

08.07.2017
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் காதுகேளாத பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான 4வது சதுரங்க போட்டிகள் துவங்கியது.

ஓசூரில் 4வது ஆண்டு மாநில அளவிலான காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் சதுரங்க போட்டிகள் துவங்கியது.

இந்த போட்டிகளில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், காஞ்சிபுரம், நெல்லை உள்ளிட்ட தமிழகத்திலுள்ள 11 மாவட்டங்களை சோந்த காதுகேளாத பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு விளையாடுகின்றனர்.

போட்டியானது இரண்டு நாட்களாக சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் தொடர்ந்து நடைபெற உள்ளன.

இறுதிப்போட்டியில் வெற்றி பெரும் மாணவ, மாணவியர்கள் தேசிய அளவில் நடைபெறும் காதுகேளாதோருக்கான சதுரங்க போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த சதுரங்க போட்டிகளுக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு கழகம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட காதுகேளாதோர் சதுரங்க விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

No comments:

Post a Comment