Pages

Wednesday, July 12, 2017

காது கேளாதோருக்கு ஆடியோகிராம் சோதனை

12.07.2017
சேலம்: காதுகேளாத மாணவர்களுக்கு, ஆடியோகிராம் சோதனை நடந்தது. அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், காது கேளாத, 18 வயது வரையுள்ள மாணவர்களுக்கான 'ஆடியோகிராம்' பரிசோதனை நேற்று நடந்தது. அதில், சேலம் ஊரக வட்டார வளமையத்தில், ஏப்ரல், மே மாத கணக்கெடுப்பின்போது கண்டறிந்த மாற்றுத்திறனாளிகள், 35 பேர் சோதனை செய்துகொண்டனர். அவர்களுக்கு, சுதாகர் இ.என்.டி., மருத்துவமனை முதன்மை மருத்துவர் சுதாகர், தீபா அடங்கிய குழுவினர், சோதனை செய்தனர். இதன் அறிக்கை அடிப்படையில், மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை, காதுகேட்கும் கருவி மற்றும் செவித்திறன் பயிற்சி வழங்கப்படும்.

No comments:

Post a Comment