Pages

Friday, August 25, 2017

கணவர் வெறிச்செயல்: மாற்றுத்திறனாளி இரும்பு கம்பியால் அடித்து கொலை

24.08.2017
ஓசூர்: மாற்றுத்திறனாளி சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவரான சியாமளா என்ற மாற்றுத்திறனாளி பெண் அவரது கணவனால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

ஓசூர் சீதாராம்நகர் பகுதியை சேர்ந்தவர் சியாமளா. இவரது கணவர் நஞ்சுண்டசாமி இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

மாற்றுத்திறனாளியான சியாமளா தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் தலைவராக இருந்தார்.

சியாமளாவிற்கும் அவரது கணவர் நஞ்சுண்டசாமிக்கும் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகறாறு ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நஞ்சுண்டசாமி சியாமளாவை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கியுள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சியாமளாவை அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் மீட்டு ஒசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் அங்கு அவர் சிசிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார், மனைவியை கொலை செய்த நஞ்சுண்டசாமியை கைது செய்தனர்.

இதனிடைய, இந்த சம்பவத்திற்கு மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment