Pages

Friday, October 6, 2017

ஓட்டுனர் உரிமம்: காதுகேளாதோர் கோரிக்கை

05.10.2017 கோவை;
காதுகேளாதோருக்கு ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டுமென்று காதுகோளாதோர் மற்றும் வாய்பேச இயலாதோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ் விடுத்துள்ள அறிக்கை:தமிழகத்தில் காதுகேளாத, வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளிகள் சுமார் ஒரு லட்சம் பேர் வரை உள்ளனர். இவர்களுக்கு தமிழகத்தில் மட்டும் தான் ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுவதில்லை. கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் ஓட்டுநர் உரிமம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment