Pages

Wednesday, November 22, 2017

மாற்றுத்திறனாளி மாணவர்கள் சாதனை

21.11.2017 செக்கானுாரணி: மதுரையில் நடந்த மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான விளை யாட்டு போட்டிகளில் செக்கானுாரணி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதித்துள் ளனர்.காது கேளாத, பேசும் திறன் அற்றோர் ஓட்டத்தில் 50 மீ, 100 மீ பிரிவுகளில் பள்ளி மாணவர் கார்த்திக் இரண்டாமிடம் வென்றார். பேச்சு திறன் இருந்தும் உடல் ஊனமுற்றோர் 100 மீ, 50 மீ பிரிவுகளில் மாணவர் சிந்தனை செல்வன் இரண்டாமிடம் வென்றார்.மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் இன்பரசுபாண்டியன், சதீஷ்குமார் ஆகியோரை தலைமை ஆசிரியர் கணபதிசுப்ர மணியன், உதவி தலைமை ஆசிரியர் பிரபு பாராட்டினர்.

No comments:

Post a Comment