Pages

Wednesday, November 22, 2017

ரயிலில் அடிபட்டு DEAF மாற்றுத்திறனாளி பலி

22.11.2017, திருத்தணி:
திருத்தணி, வாட்டர் டேங்க் முதல் தெருவைச் சேர்ந்தவர், அரி மனைவி ஜமுனா, 27. ஜமுனாவிற்கு காது கேட்காது, வாய் பேச முடியாது. இவர், திருத்தணி புறவழிச் சாலையில் உள்ள, தனியார் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், வேலை செய்து வந்தார்.நேற்று, காலை, 8:30 மணிக்கு, ஜமுனா வேலைக்கு செல்வதற்காக, கமலா தியேட்டர் வழியாக, தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார்.அப்போது, திருப்பதியில் இருந்து, திருத்தணி வழியாக, சென்னை சென்டரல் வரை செல்லும், கருடாத்ரி விரைவு ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே இறந்தார்.அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, விசாரிக்கின்றனர்.


No comments:

Post a Comment