Pages

Thursday, December 14, 2017

3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று காதுகேளாத மாணவன் சாதனை.!

3 தங்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று
காதுகேளாத மாணவன் சாதனை.!
12.12.2017
தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவன் தேசிய அளவில் நடந்த போட்டியில் கலந்து கொண்டு, 3 தங்கபதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளான்.

திருச்சி மாவட்டம் துறையூர் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் காமராஜ். இவரது மகன் மணிகண்டன், பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். தளகட போட்டிகளில் ஆர்வம் கொண்ட மணிகண்டன், அதில் பல்வேறு வெற்றிகளை குவித்துள்ளார்.

டெல்லியில் கடந்த 1 ம் தேதி முதல் 6 ம் தேதி வரை நடந்த இந்திய காது கேளாதோர் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில், 3 தங்கபதக்கம், ஒரு வெள்ளி பதக்கம் வென்று தமிழக மாணவன் சாதனை படைத்துள்ளான்.

காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோர் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ள இந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் மணிகண்டன் பங்கேற்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment