Pages

Wednesday, July 18, 2018

சென்னை சிறுமி பலாத்கார வழக்கு... 17 பேருக்கு ஆண்மை டெஸ்ட் செய்ய போலீஸ் முடிவு


18.07.2018, சென்னை: சென்னை அயனாவரத்தில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

சென்னை அயனாவரம் செகரடேரியட் காலனியைச் சேர்ந்த 11 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார். காது கேளாத மாணவியான இவரை இவர் வசிக்கும் அபார்ட்மென்ட்டின் லிப்ட் ஆபரேட்டர் உள்பட 17 பேர் கடந்த 7 மாதங்களாக பலாத்காரம் செய்தனர்.

இதனால் வயிற்றில் ஏற்பட்ட வலியால் மருத்துவமனைக்கு சென்றபோது இந்த விவகாரம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பெற்றோரின் புகாரின் பேரில் போலீஸார் 17 பேரை கைது செய்தனர். 

அவர்களுக்கு வரும் 31-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 17 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாக்கும் அம்சங்கள் ஏதும் இல்லாத ஆண்கள் என்பதற்கே தகுதியில்லாத இந்த மிருகங்களுக்கு ஆண்மை பரிசோதனை செய்து காலத்தை விரயம் செய்யாமல் விரைவில் தூக்கிலிட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


No comments:

Post a Comment