Pages

Saturday, July 7, 2018

காதுகேளாதோர், பார்வையற்றோர் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மெட்ரோ ரயிலில் பயணம்


05.07.2018, சென்னை;மாற்றுத்திறனாளி பள்ளி மாணவர்கள் நேற்றுமுன்தினம், மெட்ரோ ரயிலில், இலவச பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.மெட்ரோ ரயிலில் பயணம் செய்யவும், ரயில் நவீன தொழில்நுட்பத்தை பள்ளி குழந்தைகள் தெரிந்து கொள்ளவும், நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு மாதமும், அரசு பள்ளி, மாணவ - மாணவியர், இலவச பயணம் அழைத்து செல்லப்படுகின்றனர்.
இதனையொட்டி, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள, காதுகேளாதோர், பார்வையற்றோர் கான்வென்ட், மேல்நிலை பள்ளி, மாணவ - மாணவியர், 150 பேர், நேற்றுமுன்தினம், மெட்ரோ ரயிலில் இலவச பயணமாக அழைத்து செல்லப்பட்டனர்.சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து, விமான நிலையம் - தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., - ஆலந்துார் - சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் வரை, அவர்கள் அழைத்துசெல்லப்பட்டனர்.பயணத்தின் போது, மெட்ரோ ரயில் போக்குவரத்தில் கையாளப்படும் நவீன தொழில் நுட்பம்மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாணவ - மாணவியருக்கு அதிகாரிகள்தெரிவித்தனர்.

No comments:

Post a Comment