Pages

Tuesday, July 24, 2018

போட்டிகளில் பதக்கம் குவித்த மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

24.07.2018
சிவகங்கை: தேசிய போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை குவித்த, 25 மாற்றுத்திறனாளிகளுக்கு, ஓராண்டாக சான்றிதழ் கிடைக்காததால் தவிக்கின்றனர்.கடந்த ஆண்டு குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், தேசிய அளவில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், தமிழகத்தில், 47 பேர் பங்கேற்றனர்.சிவகங்கை மாவட்டம், மானாமதுரை, சி.எஸ்.ஐ., காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கால்பந்து அணி, வெள்ளி பதக்கம் வென்றது.மாநிலம் முழுவதும், 25 பேர் பதக்கங்களை வென்றனர். ஓராண்டு கடந்த நிலையில், போட்டியில் வென்றதற்கு சான்றிதழ் வழங்கவில்லை. பதக்கங்கள் வென்றும் சான்றிதழ் கிடைக்காததால், மாற்றுத்திறனாளிகள் தவிக்கின்றனர்.

No comments:

Post a Comment