Pages

Tuesday, August 28, 2018

வாய் பேச முடியாத, காது கேட்காத மகனை கொன்ற தந்தைக்கு 10 ஆண்டு சிறை

24.08.2018
திருப்பத்துார்: மகனை கொன்ற தந்தைக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
வேலுார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த, தேவலாபுரத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன், 45; கூலித் தொழிலாளி. இவர், மனைவி ஜெயலட்சுமி, 40, மகன் கார்த்தி, 20. இவர், வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி.
குடும்பத்தகராறால், கணவன், மனைவி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், 2014, நவ., 2ல் போதையில் வீட்டுக்கு வந்த ஐயப்பன், கார்த்தியிடம் குடிக்க பணம் கேட்டார்.
அவர் மவுனமாக இருந்ததால், ஆத்திரமடைந்த ஐயப்பன், விறகு கட்டையால், அடித்துக் கொன்றார். உம்மராபாத் போலீசார், அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கு, திருப்பத்துார் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மகனை கொன்ற ஐயப்பனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment