Pages

Sunday, October 14, 2018

வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய வாய் பேசாத, காது கேட்காத மாற்று திறனாளி கணவர்

14.10.2018
திருக்கோவிலுார்:வரதட்சணை கேட்டு மனைவியை அடித்து துன்புறுத்திய கணவர் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த கூவனுாரை சேர்ந்தவர் ஏழுமலை,30; வாய் பேசாத, காது கேட்காத மாற்று திறனாளி. இவரது மனைவி சிவகாமி‚25; திருமணமாகி ஐந்து ஆண்டாகும் இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில் சிவகாமியை, வரதட்சணை கேட்டு ஏழுமலை மற்றும் அவரது தாய் ஜெயராஜம், உறவினர்கள் இந்திரா, ஜெயராமன் ஆகியோர் சிவகாமியை அடித்து துன்புறுத்தி வந்தனர்.இதுகுறித்து சிவகாமி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார்‚ ஏழுமலை உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment