Pages

Tuesday, October 23, 2018

தேர்தல் களத்தில் முதல்முறையாக களமிறங்கும் வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத மாற்றுத்திறனாளி வேட்பாளர்!


போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், இந்தியாவிலேயே முதன் முறையாக வாய் பேச முடியாத, காது கேட்காத ஒருவர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் மத்திய பிரதேசம் மாநிம் சத்னாவில் வாய் பேச முடியாத, காது கேளாத சுதீப் சுக்லா என்ற இளைஞர் சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக தனித்து போட்டியிடுகிறார்.

இந்தியாவிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத பேச முடியாத ஒருவர் போட்டியிடுவது முதல் முறையாகும்.

இவர் ஏற்கனவே சாப்டுவேர் துறையில் ஒரு லட்சம் சம்பளத்துடன் வேலையை விட்டுவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் இறங்கியுள்ளர்.

இது குறித்து, சுதீப் சுக்லா கூறுகையில், டெல்லி, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் பெண்களுக்கு நடக்கும் குற்றங்களை எந்த அரசியல் தலைவர்களும் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டினார். 

இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுத்து பாருங்கள் மாற்றைத்தை காண்பீர்கள் கூறினார். பாஜக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தின் போது மட்டுமே வாக்குறுதி கொடுக்கிறார்கள், வெற்றி பெற்ற பின்பு மக்களை திரும்பிக் கூட பார்ப்பதில்லை என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment