Pages

Saturday, November 24, 2018

ஆவின் பாலகங்கள் அமைக்க மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்


நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கை, கால்கள் பாதிக்கப்பட்ட, காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு, ஆவின் பாலகம் அமைக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. தங்களுக்கு சொந்த இடம், கட்டடம் அல்லது வாடகைக்கு இடம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், உரிய ஆவணங்களுடன் நேரில் தொடர்பு கொண்டு பயன் பெறலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment