Pages

Wednesday, February 13, 2019

வாய் பேச இயலாத மாணவிக்கு லேப்டாப்: தி.மு.க., - மா.செ., வழங்கினார்

13.02.2019
மொடக்குறிச்சி: தி.மு.க., ஊராட்சி சபை கூட்டத்தில், மனு கொடுத்த, வாய் பேச இயலாத கல்லூரி மாணவிக்கு, லேப்டாப் வழங்கப்பட்டது. மொடக்குறிச்சி யூனியன், கண்டிக்காட்டு வலசு பஞ்., பொன்னாத்தா வலசு காலனியை சேர்ந்த, கந்தசாமி மகள் கமலவேணி, 24, வாய் பேச இயலாத, செவித்திறன் பாதித்த மாற்றுத்திறனாளி. இவர் அரச்சலூர் தனியார் கல்லூரியில், பி.ஏ., மூன்றாமாண்டு படிக்கிறார். குடும்ப சூழ்நிலை ஏழ்மையாக உள்ளதால், லேப்டாப்பில் பயிற்சி எடுத்து வேலைக்கு செல்ல ஆசைபட்டார். சமீபத்தில், அப்பகுதியில் தி.மு.க., சார்பில், கிராமசபை கூட்டம் நடந்தது. இதில், லேப்டாப் வழங்கி உதவுமாறு, கமலவேணி மனு கொடுத்தார். மாவட்ட செயலாளர் முத்துசாமி, தி.மு.க., நிர்வாகிகளுடன், கமலவேணியின் வீட்டுக்கு சென்று, லேப்டாப் வழங்கினார்.

No comments:

Post a Comment