Pages

Tuesday, October 15, 2019

பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.


15.10.2019, காஞ்சிபுரம்:பேச்சு, மொழி மற்றும் கேட்கும் திறன் குறைபாடுள்ள குழந்தைகளுக்கான, இலவச பரிசோதனை மற்றும் பயிற்சிக்கான ஆலோசனை முகாம், 15ல் காஞ்சிபுரத்தில் நடைபெறுகிறது.

சென்னை, போரூர், ராமசந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பேச்சு, மொழி, கேட்பியல் துறை மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் இணைந்து, காஞ்சிபுரம், சதாவரத்தில் உள்ள அரசு காது கேளாதோர் பள்ளியில், மருத்துவ முகாம் நடத்துகின்றன.வரும், 15ல், காலை, 9:00 மணி முதல், மாலை, 3:00 மணி வரை, இம்முகாம் நடைபெறுகிறது.இதில், 10 வயதிற்கு உட்பட்ட செவித்திறன், ஆட்டிசம், அறிவுசார் குறைபாடு, உதடு பாதிப்பு, மூளை முடக்கு வாதத்தினால் திக்குவாய், உச்சரிப்பு குறைபாடுள்ள குழந்தைகளுக்கு, இலவசமாக பரிசோதனை செய்யப்படுகிறது.பங்கேற்க, முன்பதிவு மற்றும் விபரங்களுக்கு, 99447 98555 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment