Pages

Monday, October 21, 2019

பள்ளி மாணவர்களின் மனதில் உள்ள சாதி வெறி ! மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடுமையாக தாக்கியுள்ளான்


20.10.2019 
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், ஜேடர்பாளையம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கபிலர்மலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஆதி என்ற மாணவன் சுரேந்தரன் ( காது கேட்காத, வாய் பேச முடியாத ) என்ற மாணவரை கடந்த 17-10-2019-ந்தேதி மாலை நேரத்தில் பள்ளியில் கடுமையாக தாக்கியுள்ளான். பள்ளி முடிந்து வெளியே வந்த சுரேந்தரை ஆதி மற்றும் அவருடைய அண்ணன் அதே பள்ளியில் 10-ம் வகுப்பு படிப்பவர் மற்றும் ஆதியின் உறவினர் கலைமணி ஆகியோர் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார்கள்.

தாக்குதலுக்கு சுரேந்திரன் மாணவனின் சித்தப்பாவிடம் கலைமணி என்பவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உன் மகனை அடித்து சக்கராபாளையத்தில் எரித்து விட்டேன் என்று கூறியுள்ளார். மேற்படி மாணவன் சுரேந்தர் பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனையில் 4-நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தகவல் அறிந்து தாக்குதலுக்கு ஆளான மாணவன் சுரேந்திர் அவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிவிட்டு வழக்கு பதிவு செய்ய தமிழ் புலிகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment