Pages

Sunday, July 19, 2020

ஈரோடு மாவட்டத்தில் காது கேளாத, வாய் பேச முடியாத ஐந்து பேரில், நான்கு பேர் தேர்ச்சி அடைந்தனர்

17.07.2020
ஈரோடு: பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், மாநில அளவில் தேர்வெழுதிய ஏழு கண் பார்வையற்றோரும் தேர்ச்சி பெற்றனர். காது கேளாத, வாய் பேச முடியாத ஐந்து பேரில், நான்கு பேர் தேர்ச்சி அடைந்தனர். உடல் உறுப்பு பாதிக்கப்பட்ட, 22 பேரில், 21 பேர் தேர்ச்சி பெற்றனர். பிற பிரிவுகளை சேர்ந்த ஏழு மாற்று திறனாளிகளில், ஆறு பேர் தேர்ச்சி பெற்றனர். ஈரோடு மாவட்டம், 96.99 சதவீத தேர்ச்சி பெற்று மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது. இதேபோல் கடந்தாண்டு, 95.23 சதவீதம், 2018ல், 96.30 சதவீதம் தேர்ச்சி பெற்று, மாநிலத்தில் இரண்டாமிடம் பிடித்தது. மூன்றாமாண்டாக இரண்டாமிடம் பிடித்து, 'ஹாட்ரிக்' சாதனை படைத்துள்ளது.

No comments:

Post a Comment