Pages

Wednesday, September 16, 2020

காட்டு யானை தாக்கி காது கேளாத மாற்றுத்திறனாளியான முதியவர் பலி

16.09.2020
பாலக்காடு : பாலக்காடு மாவட்டம், அட்டப்பாடியில் காட்டுயானை தாக்கி முதியவர் பலியாயினர்.சோலையூரை சேர்ந்த 70 வயது பழங்குடி முதியவர், நேற்று விறகு சேகரிக்க, அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார். காது கேளாத மாற்றுத்திறனாளியான அவர், காட்டு யானை அருகில் வருவதை அறியவில்லை. தப்பியோட முடியாமல் சிக்கிய அவரை, யானை மிதித்தும் தந்தத்தால் தாக்கியும் கொன்றது.சம்பவத்துக்கு பின், சில மணி நேரம் அப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானையால், ஊர்மக்கள் அருகில் செல்ல முடியவில்லை. பின், வனத்துறையினர், போலீசார் வந்து சடலத்தை மீட்டனர்.




No comments:

Post a Comment