Pages

Tuesday, October 6, 2020

உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் காது கேளாத இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை

06.10.2020
உத்தரபிரதேசத்தின் கோரக்பூரில் காது கேளாத இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர்.

கோரக்பூர் மாவட்டத்தின் செளரி செளரா கிரமத்தில் திங்கள்கிழமை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த காது கேளாத 18 வயது இளம் பெண்ணை அப்பகுதியை சேர்ந்த பிந்து பிரசாத் (25) என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அங்கு வந்த அப்பெண்ணின் அண்ணி, பிந்துவை தடுத்துள்ளார். இதையடுத்து அவரை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பியோடினார்.

புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 376 (கற்பழிப்பு) இன் கீழ் வழக்குப் பதிவு செய்து செவ்வாய்க்கிழமை பிந்து பிரசாதை காவல்துறையினர் கைது செய்தனர்.



No comments:

Post a Comment