Pages

Monday, February 22, 2021

பார்வை, செவித்திறன் பாதிக்கப்பட்ட 210 பேருக்கு செல்போன் வழங்கல்

19.02.2021
கரூர்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பார்வை, செவித்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் செல்போன் வழங்கும் விழா ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது.

இதில், மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரூ.26.88 லட்சம் மதிப்பிலான தக்க செயலிகளுடன் கூடிய செல்போன்களை பார்வை, செவித்திறன் பாதிக்கப்பட்ட 210 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.

கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ ம.கீதா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.ராஜேந்திரன், கரூர் கோட்டாட்சியர் என்.எஸ்.பாலசுப்பிரமணியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



No comments:

Post a Comment