Pages

Tuesday, February 16, 2021

மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மார்ட் போன்

16.02.2021
விழுப்புரம் - செவித்திறன் மற்றும் பார்வைதிறன் பாதித்த மாற்றுதிறனாளிகளுக்கு தக்க செயலிகளுடன் கூடிய ஸ்மார்ட் போன் வழங்குவதற்கான நேர்முகத் தேர்வு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில், பார்வையற்றவர்கள் 232 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டது. அவர்களில் 196 பேர் கலந்து கொண்டனர். அதேபோன்று செவித்திறன் பாதித்தவர்கள் 225 பேருக்கு அழைப்பு கடிதம் அனுப்பியதில், 180 பேர் பங்கேற்றனர்.தேர்வுக்குழு உறுப்பினர்களான கலெக்டர் அண்ணாதுரை தலைமையில் மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் குமார், அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர் சங்கர், வேலா சிறப்பு பள்ளி சிறப்பாசிரியர் பார்த்தசாரதி மற்றும் அலுவலர்கள் இருவர் உள்ளிட்டோர் தேர்வு செய்தனர்.இக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு, விரைவில் தக்க செயலிகளோடு கூடிய ஸ்மார்ட் போன் வழங்கப்பட உள்ளது.


No comments:

Post a Comment