Pages

Tuesday, February 15, 2022

6 குறைகள் இருந்தால் சலுகை: பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு


கோவை:பொதுத்தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள், அரசு தேர்வுத்துறை பட்டியலிட்ட ஆறு விதமான குறைபாடுகளின் கீழ் வரும் பட்சத்தில், சலுகைகளை பெறுவதற்கான விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் நேரம், தேர்வு எழுதுவதற்கு உதவியாளர் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுவது வழக்கம்.அதன்படி, சலுகை தேவைப்படும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. அதன்படி, பார்வையற்றோர், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர், உடல் ஊனமுற்றோர், கைமுறிவு ஏற்பட்டோர், மனநலம் குன்றியோர், டிஸ்லெக்சியா குறைபாடு, நரம்பியல் குறைபாடு, ஆகிய குறைபாடுள்ளவர்களுக்கு, சலுகை வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய மாணவர்களின் அடையாள அட்டை நகல், மருத்துவ குழுவின் பரிந்துரைக்கடிதம் பிற விபரங்களை, சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.




No comments:

Post a Comment