Pages

Tuesday, April 19, 2022

ஏப். 26ல் மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள்


விருதுநகர்,:2021 - -22க்கான மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு போட்டிகள் ஏப். 26ல் விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கிறது.இப்போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பில்லை. மருத்துவ சான்று அல்லது மறுவாழ்வு அதிகாரியால் வழங்கப்பட்ட சான்று பெற்று வர வேண்டும். மாவட்ட அளவில் முதலிடம் பெறுபவர்கள் மாநில போட்டிகளில் பங்கேற்க தேர்வு செய்யப்படுவர்.கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காது கேளாதோர் பங்கேற்கும் வகையில் 50 மீ., 100 மீ., குண்டு எறிதல், தாண்டுதல் போட்டிகளும், குழு விளையாட்டு போட்டிகளான பாட்மிண்டன், கபாடி, எறிபந்து உள்ளிட்ட விளையாட்டுக்களில் பங்கேற்கலாம், பங்கேற்க விரும்புபவர்கள் ஏப். 26 காலை 8:00 மணிக்கு நேரில் வர வேண்டும், என மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment