Pages

Monday, June 17, 2024

திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக நடவடிக்கை


15.06.2024
உயர் கல்வி பயில விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயன்பெற ஏதுவாக நடவடிக்கை எடுத்துள்ளதாக ஆட்சியர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றுத்திறனாளிகள் நலச் சட்டம் பிரிவு 32 (1) இன்படி, மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் கல்லூரி சேர்க்கை பெறுவதில், பின்தள்ளப்படுவதாகவும், அவர்களது உரிமைகள் மறுக்கப்படுவதாகவும், இவற்றைக் களைந்து கல்வி பயிலுவதில் கல்வி உரிமைகளை 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கும் சம அளவில் கிடைக்க பெறச் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் உயர் கல்வி பயில் விரும்பும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கீழ் குறிப்பிட்டுள்ள கல்லூரிகளில் கட்டண விலக்கு பெற்று பயனடையலாம். மேலும், இது குறித்து திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொலைபேசி எண்: 044-27662985, கைப்பேசி எண்: 9499933496 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம்.




No comments:

Post a Comment