Pages

Thursday, December 11, 2025

மாற்றுத்திறனாளிகளின் விண்ணப்பங்கள் விரைந்து பரிசீலனை.. தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு!



11.12.2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் குரும்பர் இனத்தை சார்ந்த சோமசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

மாற்றுத்திறனாளிகள் அளிக்கும் விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலத்திற்குள் பரிசீலித்து முடிவெடுக்கும்படி, அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப தலைமை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனக்கும், தனது மகள்களுக்கும் பழங்குடியினர் சாதி சான்று வழங்கக் கோரி திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் குரும்பர் இனத்தை சார்ந்த சோமசுந்தரம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் பார்வைக் குறைபாடு மாற்றுத் திறனாளி என்பது தெரியவந்ததை அடுத்து, சாதிச் சான்று கோரிய மனுதாரரின் விண்ணப்பத்தை ஒரு மாதத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும் என, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டனர்.



No comments:

Post a Comment