Pages

Tuesday, April 21, 2015

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தீர்மானங்கள்

19.04.2015
நாமக்கல் அருகே நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் அரசு பணியிடத்தில் 3 சதவீத இட ஓதுக்கீட்டை உடனே அமல் படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடைபெற்றது. இதில், மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்க ஏற்பாடு செய்து தர வேண்டும், சுயதொழில் தொடங்க ஏற்பாடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மாற்றுத்திறனாளிகள் சார்பில் விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது.

No comments:

Post a Comment