Pages

Monday, June 15, 2015

பாலியல் பலாத்காரம் செய்து காது கேளாத, வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளி பெண் கொலை வாலிபருக்கு இரட்டை ஆயுள்

14.06.2015, தஞ்சை: 
மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்து கொ ன்ற வாலிபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டம் பெரும்புகலூர் கிராமத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகள் கவிதா(22). காது கேளாத, வாய் பேச இயலாதவர். இவர் நாகை மாவட்டம் கீழ் வேளூர் அருகே ஓர்குடி கிராமத்தில் அவரது சகோதரி குமுதம் வீட்டில் வசித்து வந்தார். கடந்த 2012 ஜூலை 3ம் தேதி இரவு 9 மணியளவில் இயற்கை உபாதைக்காக அதே பகுதியில் உள்ள கட்டமதகு மணல் குவாரி என்ற இடத்திற்கு கவிதா சென்றார். அப்போது அவரை அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரன்(31) பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர், இதை வெளியே சொல்லி விடுவார் என்று பயந்த ஈஸ்வரன் அவரை குவாரியில் தேங்கியிருந்த தண்ணீரில் தூக்கி வீசினார். இதில் மூச்சுத் திணறி கவிதா இறந்தார்.

இது குறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிந்து ஈஸ்வரனை கைது செய்தனர். தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் ஈஸ்வரனுக்கு பாலியல் வன்கொடுமைக்காக ஒரு ஆயுள் தண்டனை, கொலை குற்றத்திற்காக ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனையும், இரு குற்றத்திற்கும் தலா 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சதீஷ்குமார் தீர்ப்பளித்தார். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment