Pages

Monday, September 28, 2015

புதுவை கடற்கரையில் காதுகேளாதோர் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம்

28.09.2015, புதுச்சேரி,
உலக காதுகேளாதோர் தினத்தையொட்டி புதுச்சேரி காதுகேளாதோர் சங்கம் சார்பில் புதுவை கடற்கரையில் ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் அனைவருக்கும் ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும், புதுவையில் உள்ள காதுகேளாதோர் மாணவர்கள் உயர்கல்வி பயில ஒரு கல்லூரியிலாவது பி.காம் அல்லது பி.எஸ்சி வகுப்புகள் தொடங்க வேண்டும், அதேபோல் கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் அரசு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

ஊர்வலத்திற்கு சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன், பாலமோகனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஊர்வலத்தில் காதுகேளாதோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment