Pages

Saturday, October 31, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

30.10.2015, ராமநாதபுரம்:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய், 6 முதல் 8 வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
இதனை பெற இதர அரசு துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. தகுதி யுள்ளோர் பள்ளி தலைமைஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment