FLASH NEWS: உங்கள் சுதந்திரம் உங்களுக்கே திருப்பி தரப்படும்... புதிய கட்சியை தொடங்கி எலான் மஸ்க் அறிவிப்பு ***** ஈரானில் சர்வதேச விமானங்கள் மீண்டும் இயக்கம் ***** அமெரிக்காவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 27 ஆக உயர்வு ***** ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில்... இந்தியா-டிரினிடாட் அண்டு டுபாகோ இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ***** உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவிய ரஷியா ***** இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 500 சதவீதம் வரி.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் ***** ஜப்பானில் 2 வாரங்களில் 900 முறை நிலநடுக்கம் ***** அந்தமான் கடல் பகுதியில் நிலநடுக்கம் ***** காஷ்மீரில் அமர்நாத் பக்தர்கள் சென்ற 5 பஸ்கள் அடுத்தடுத்து மோதல்; 36 பேர் காயம் ***** தொழிலாளர்களின் பணி நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு -தெலுங்கானா அரசு உத்தரவு ***** கேரளாவில் 2 பேருக்கு நிபா வைரஸ் அறிகுறிகள்; 3 மாவட்டங்களில் உஷார் நிலை *****

Saturday, October 31, 2015

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை

30.10.2015, ராமநாதபுரம்:
பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் நந்தகுமார் கூறியதாவது: மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஆயிரம் ரூபாய், 6 முதல் 8 வரை ரூ.3 ஆயிரம், 9 முதல் பிளஸ் 2 வரை ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.
கல்லூரிகளில் இளநிலை பயிலும் மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரம், முதுநிலை பட்டப்படிப்பு மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற்கல்வி மாணவர்களுக்கு ரூ.7 ஆயிரம் வழங்கப்படும்.
இதனை பெற இதர அரசு துறைகளில் உதவித்தொகை பெற்றிருக்க கூடாது. தகுதி யுள்ளோர் பள்ளி தலைமைஆசிரியர்கள், கல்லூரி முதல்வர்கள் மூலம் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும், என்றார்

No comments:

Post a Comment