Pages

Wednesday, January 13, 2016

இரவுக் காவலர், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி, 11 January 2016
தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள இரவுக் காவலர், துப்புரவாளர், ஆயா பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு இரவுக் காவலர் பணியிடம் காலியாக உள்ளது. அரசு காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் ஒன்றும், இரவுக் காவலர் பணியிடம் ஒன்றும், ஆயா பணியிடங்கள் மூன்றும் காலியாக உள்ளன.

மேலும், அரசுப் பார்வையற்றோர் பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் ஒன்றும், ஆயா பணியிடங்கள் நான்கும் காலியாக உள்ளன. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்துப் பணியிடங்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment