FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, January 13, 2016

இரவுக் காவலர், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தருமபுரி, 11 January 2016
தருமபுரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் காலியாக உள்ள இரவுக் காவலர், துப்புரவாளர், ஆயா பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒரு இரவுக் காவலர் பணியிடம் காலியாக உள்ளது. அரசு காதுகேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் ஒன்றும், இரவுக் காவலர் பணியிடம் ஒன்றும், ஆயா பணியிடங்கள் மூன்றும் காலியாக உள்ளன.

மேலும், அரசுப் பார்வையற்றோர் பள்ளியில் இரவுக் காவலர் மற்றும் துப்புரவாளர் பணியிடம் ஒன்றும், ஆயா பணியிடங்கள் நான்கும் காலியாக உள்ளன. தமிழ் எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.

அனைத்துப் பணியிடங்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

விண்ணப்பிக்க வருகிற 20-ஆம் தேதி கடைசி நாளாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment