Pages

Tuesday, January 10, 2017

காது கேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த மாணவன் தற்கொலை!

10.01.2017
விருத்தாசலம் அருகே கோணான் குப்பம் காதுகேளாதோர் மேல்நிலை பள்ளியில் படித்துவந்த 8ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கோணான் குப்பம் கிராமத்தில் காது கேளாதோர் மற்றும் மனநிலை குன்றியோர் மேல்நிலைபள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில், அங்கேயே தங்கி 8-ம் வகுப்பு படித்துவந்த அந்தோணி ஜோசப் என்கிற மாணவன், நேற்று இரவு சாப்பிட்டு விட்டு அவருடைய அறைக்கு படுக்க சென்றுள்ளார்.

ஆனால், இன்று அறையை விட்டு அவன் வெளியே வராததால், விடுதி காப்பாளர் சென்று பார்த்துள்ளார்.

அப்போது அந்தோணிராஜ் தூக்கில் தொங்கிக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து மங்கலம்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

பின்னர் உடலைக் கைப்பற்றிய போலீசார், மாணவனின் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment