Pages

Saturday, August 12, 2017

வேலை கேட்டு 21 ஆண்டாக அலையும் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி :கண்டு கொள்ளாத அதிகாரிகள்

09.08.2017 விருதுநகர்:வேலை கேட்டு விருதுநகர் கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளுக்கு மேலாக அலைகிறார் காது கேளாத, பேச முடியாத மாற்றுத்திறனாளி . கஜினி அரசரின் படைடெடுப்பை மிஞ்சும் வகையில் நடையாய் நடக்கும் இவரை அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளாததால், இவரது விடா முயற்சியும் தொடர்கிறது.
விருதுநகர் ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி,44. திருமணமாகி ஒரு மகன் உள்ளார்.மாற்றுத்திறனாளியான இவர் 10 ம் வகுப்பு படித்து, விருதுநகரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லுரியில் டூவீலர் மெக்கானிசம் முடித்துள்ளார். அதன்பின் சென்னையில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளார். இதுவரை வேலைக்கான அழைப்பு வரவில்லை. அரசு வேலை கேட்டு கலெக்டர் அலுவலகத்திற்கு 21 ஆண்டுகளாக நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்.அவர் தரப்பில் வழங்கிய மனுவில், “என் மனைவி என்னுடன் இல்லை. மகன்தான் இருக்கிறார். வெல்டிங் வேலை பார்த்து மகனை கல்லுரியில் படிக்க வைக்கிறேன். வயதான என் அம்மாவும் என்னுடன் தான் உள்ளார். 

தற்போது உடல்நிலை சரியில்லாது வேலையின்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். 1995 ல் டூவீலர் மெக்கானிசம் முடித்த நாள் முதல் வேலைக்கு பதிவு செய்து, வேலைக்கான அழைப்பு கடிதம் எதுவும் வரவில்லை, கடந்த 21 ஆண்டுகளாக கலெக்டர் அலுவலகத்திற்கு வேலை கேட்டுஅலைகிறேன். பல கலெக்டரிடம் பல முறை மனு கொடுத்து விட்டேன். யாரும் கண்டு கொள்வதும் இல்லை. அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு வேலை கிடைக்கும் நம்பிக்கையில் உள்ளேன், ”என,குறிப்பிட்டிருந்தார்.

No comments:

Post a Comment