Pages

Saturday, August 12, 2017

பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம்


10.08.2017 சென்னை: சென்னையில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சென்னை கடற்கரை சாலையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் மாநில ஆணையரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய உதவித்தொகையை வழங்க வேண்டும், முகவரி மாறினாலூம் உதவித்தொகையை நிறுத்தக் கூடாது, அடையாளச் சான்றை மாற்றக் கோரி வற்புறுத்தக் கூடாது என்பவன உள்ளிட்டக் கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை கைது செய்த போலீசார் அவர்களை பேருந்துகளில் ஏற்றி அழைத்துச் சென்றனர்.

No comments:

Post a Comment