Pages

Sunday, September 3, 2017

காது கேளாதோர் மாற்றுத் திறனாளிகளுக்கான தடகளப் போட்டிகள்

01.09.2017
சிவகாசியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாநில அளவிலான தடகள போட்டியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் காது கேளாதோர் வாய்பேச முடியாத மாற்றுதிறன் கொண்ட பள்ளி கல்லூரி மாணவ, மாணவியருக்கான மாநில அளவிலான தடகள போட்டி நடைபெற்றன.இதில் சென்னை,கோவை, நெல்லை விருதுநகர் உள்ளிட்ட 20 மாவட்டங்களை சேர்ந்த 320 மாணவ,மாணவியர் கலந்துகொண்டனர்.

ஜூனியர் மற்றும் சீனியர் என இரு பிரிவுகளாக மாணவ மாணவியருக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றது. 100 மீட்டர் ஓட்டம், தடை தாண்டுதல் உயரம் தாண்டுதல்,ஈட்டி எறிதல் வட்டு எறிதல் உள்ளிட்ட தடகள போட்டிகள் நடைபெற்றது. இதில் மாற்று திறன் கொண்ட மாணவ,மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment