Pages

Tuesday, January 2, 2018

எல்லை தாண்டிய பாக். காது கேளாத, பேச முடியாத சிறுவனை ஒப்படைக்க உத்தரவு

01.01.2018
பாகிஸ்தானின் லாகூர் பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஹுசைன் (12) கடந்த மே மாதம் இந்தியாவின் பஞ்சாப் எல்லைக்குள் நுழைந்தான். அவனை எல்லைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து உள்ளூர் போலீஸில் ஒப்படைத்தனர்.

அந்த சிறுவன் காது கேளாத, பேச முடியாத மாற்றுத் திறனாளி என தெரியவந்தது. இதனால் அவனது முகவரியை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது. இதுகுறித்து பாகிஸ்தான் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த சிறுவன் லாகூரை சேர்ந்த ஜாவித் இக்பாலின் மகன் ஹுசைன் என தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப மத்திய உள்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டது.

No comments:

Post a Comment