Pages

Tuesday, January 2, 2018

கரூரில் காது கேளாதோருக்கான 'செஸ்' போட்டி



கரூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான செஸ் மற்றும் கேரம் போட்டி கரூர் நாரதகான சபாவில் நடைபெற்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கு காதுகேளாதோர் சங்கத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். இதை மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

இதில் கரூர் மாவட்டத்தில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

போட்டியானது செஸ் மற்றும் கேரம் என இரு வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டது. இறுதியாக போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment