Pages

Monday, June 18, 2018

சென்னை ரயில் விபத்தில் காதுகேளாத சிறுமி பலி

16.06.2018
சென்னை, தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தைச் சேர்ந்தவர், கோபால் மகள் துர்கா, 13; காது கேளாத குறைபா-டுள்ள இவர், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.நேற்று காலை, கடைக்கு சென்ற சிறுமி, கூடுவாஞ்சேரி - ஊரப்பாக்கம் இடையே உள்ள தண்டவாளத்தை கடந்தார். அப்போது, அவ்வழியே சென்ற ரயிலில் அடிபட்டு, துர்கா பரிதாபமாக பலியானார்.தாம்பரம் ரயில்வே போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். வழக்குப் பதிந்த தாம்பரம் ரயில்வே போலீசார், விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment