Pages

Monday, June 18, 2018

செவித்திறன் பரிசோதனை

16.06.2018
திருமங்கலம், திருமங்கலம் அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் செவித்திறன் பரிசோதனை நடக்கிறது.தலைமை டாக்டர் பூமிநாதன் கூறியதாவது: இம்மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கு தனி டாக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் செவ்வாய் தோறும் செவித்திறன் பரிசோதனை நடத்தப்படுகிறது. செவித்திறன் குறைந்தவர்களுக்கு அரசு காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சையும், செவித்திறன் கருவியும் வழங்கப்படுகிறது. இதுவரை 200 பேருக்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சைனஸ் பிரச்னை உள்ளவர்களுக்கு எண்டோஸ்கோபி மூலம் சிகிச்சையும், டான்சில் பிரச்னை உள்ளவர்களுக்கு இலவச அறுவை சிகிச்சையும் செய்யப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment