Pages

Friday, September 18, 2020

தையல் இயந்திரம் வழங்க நேர்காணல்

18.09.2020
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் தையல் இயந்திரம் வழங்க பயனாளிகளிடம் நேர்காணல் நடந்தது.கை, கால் பாதிப்பு, காதுகேளாத மாற்றுத்திறனாளிகளில் தகுதிவாய்ந்த நபர்களுக்கு ஆண்டுதோறும் மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது.

மிதமான மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள் மற்றும் 75 சதவீதக்கு மேல் பாதிக்கப்பட்ட பெண்கள் வருமானம் ஈட்டும் வகையில் தையல் இயந்திரம் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பித்திருந்த 47 நபர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேர்காணல் நடந்தது.


No comments:

Post a Comment