Pages

Wednesday, September 16, 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள்

10.09.2020
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், ஐந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தலா, 4,230 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி நேற்று வழங்கினார். இதில், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர் இருவர், கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி இருவர், காது மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஒருவர் என, ஐந்து பேர், 21 ஆயிரத்து, 150 ரூபாய் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களை பெற்றுக் கொண்டனர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மகிழ்நன் உடனிருந்தார்.


No comments:

Post a Comment